இலங்கைசெய்திகள்

போலந்து நாட்டவர் பாரியளவிலான போதைப் பொருளுடன் கைது!!

24.5 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயினுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலம்பியாவில் இருந்து கட்டார் எயார்வேய்ஸின் QR – 662 விமானத்தின் ஊடாக வருகை தந்த இந்த நபர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைநகல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் காகிதச் சுருள்களுக்குள் மறைத்து வைத்துவைக்கப்பட்டிருந்த குறைந்தது 5 கிலோ எடையுள்ள கொக்கேய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button