இலங்கைசெய்திகள்

ஆரியகுளம் விபத்தில் அல்வாய் இளைஞர் பலி!

யாழ்., ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் (வயது – 32) என்ற இளைஞரே இந்த விபத்தின்போது உரிரிழந்துள்ளார்.

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அரச நிறுவனம் ஒன்று பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் தனது பணி நிமிர்த்தம் இன்று அதிகாலை சென்ற வேளை குறித்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button