![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/main-qimg-3136eb3bf6bde3f6e07d32e9adab84b8-1024x643.jpg?resize=708%2C445&ssl=1)
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தற்காலிகமாக பலத்த காற்று வீசும்போது மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.