![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/202007040916454332_Tamil_News_America-gained-independence_SECVPF.jpg?resize=615%2C350&ssl=1)
தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 8 ஆபிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
தென்ஆபிரிக்காவில் கடந்த நவம்பரில் ஒமைக்ரொன் கொவிட் திரிபு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகள் வெளிநாட்டு பயண கட்டுப்பாடுகளை விதித்தன.
அதற்கமைய, 8 ஆபிரிக்கா நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தமது நாட்டுகள் நுழைய அமெரிக்கா தடை விதித்தது.
இந்த நிலையில், தென்ஆபிரிக்கா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், சிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மலாவி ஆகிய 8 ஆபிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியுள்ளாரென வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.