இலங்கைசெய்திகள்

அச்சுவேலி தென்னிந்திய திருச்சபை முன்பள்ளியின் ஒளிவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!! 

Achchuveli

அச்சுவேலியில் உள்ள தென்னிந்திய திருச்சபை முன்பள்ளியின்  ஒளிவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும்   26.12.2022 இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சபைக்குரு   தேவமித்திரன் தலைமையில்   இடம்பெற்ற இந் நிகழ்வில்  S.S .ஜெபச்செல்வன்  ( st ஜோன்ஸ் ஆலயம் – சுண்டுக்குழி) அவர்கள் பிரதம விருந்தினராகவும்  திருமதி.  நி. பிரியதர்சினி ( கிராம நிலதாரி – அச்சுவேலி வடக்கு) அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்துள்ளனர். 

மாணவர் கல்விக்கும் அப்பால்,  பாதுகாப்பிலும் ஒழுக்கத்திலும் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என  ஜெபச்செலவன் ஆண்டகை அவர்கள் தமது சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள்,  பெற்றோர்கள்,  நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் போது,  ஆசிரியர்கள் கௌரவிப்பும் பரிசில் வழங்கலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

Related Articles

Leave a Reply

Back to top button