இலங்கைசெய்திகள்

அச்சுவேலி தெற்கில் விசமிகளால் சுகாதார சீர்கேடு!!

Achchuveli

அச்சு வேலி விக்னேஸ்வரா வீதி முற்பகுதியில் விசமிகளால்
மலகழிவுகளைத் தாங்கிய பம்பஸ்களை உள்ளடக்கிய உரப்பை பொதி ஒன்று வீசப்பட்டு
துர்நாற்றம் வீசியவாறு உள்ளது.

வலிகிழக்குப் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உரிய இறுக்கமான அறிவுறுத்தல்களின்படி மிகச் சுத்தமாக இருந்த வீதியை விசமிகள் அறிவுறுத்தல் பதாதயையும் கிழித்து சேதப்படுத்தி மலக்கழிவுகளால் அசிங்கப்படுத்தி உள்ளனர். இதனால் அவ்வீதியால் செல்பவர்கள் துர்நாற்றத்தால் முகம் சுழித்த படி பயணிப்பதைக் கானமுடிகிறது .இதனால் இந்த விசமிகளைக் கண்டு பிடிக்க அப்பகுதி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பிரதேச சபை கேட்டுக்கொண்டுள்ளது .

Related Articles

Leave a Reply

Back to top button