![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/12/22-639d871fbd0bc.jpeg?resize=600%2C400&ssl=1)
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து பாளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒருவர் மரணமடைந்ததுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பளை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் போட்டிக்கு ஓடியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.