இலங்கைசெய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணொருவர் விபத்தில் பலி!!

accident

கணவருடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் செல்லும் வேளையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தவேளை திடீரெனத் தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு அவர் மரணமடைந்துள்ளார்.

காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயந்தன் வேதப்பிரியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிய விசாரணைகளை ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button