![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/accident-720x375-1.webp?resize=708%2C369&ssl=1)
இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் – புத்தளம் வீதியின் இடதுபுறத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நிலையில் கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.