இலங்கைசெய்திகள்

அனுராதபுரத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞன் உயிரிழப்பு!!

accident

இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் – புத்தளம் வீதியின் இடதுபுறத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நிலையில் கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button