இலங்கைசெய்திகள்

யாழ். பருத்தித்துறை வீதியில் விபத்து!!

accident

இ.போ.ச பேருந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்.பருத்தித்துறை – மண்டான் வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா (வயது -30) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய பெண் நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்திற்கு உள்ளான நிலையில் இந்த விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button