இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம், ஆவரங்கால் சந்தியில் விபத்து!!

Accident

யாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருந்த கப் ரக வாகனம். ஆவரங்கால் சந்தியில் வீதியோரமாக மதவுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதி தூக்க கலக்கத்தில் இருந்தமையினாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், வாகனம் நேரே வருவதை உணர்ந்து சுற்றி நின்றவர்கள் சிதறி ஓடியதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லையெனினும் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button