![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/202110241618116775_Tamil_News_Tamil-News-Sendurai-near-accident-death-police-inquiry_SECVPF.jpg?resize=615%2C350&ssl=1)
வடமராட்சி, பருத்தித்துறை மந்திகைக்கும் மாலிசந்திக்கும் அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நெல்லியடிக்குச் சென்ற மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.