இலங்கைசெய்திகள்

யாழ். வட்டுக்கோட்டையில் விபத்து – இளைஞன் பலி!!

Accident

இன்று (12) காலையாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – அராலி செட்டியார் மடம் சந்தியில், இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள் ளார்.

அத்துடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேற்படி உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்தந நபர் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரொருவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button