இலங்கைசெய்திகள்

நாவற்குழி பகுதியில் பாரவூர்தி – கார் விபத்து!!

accident

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் பாரவூர்த்தியும் காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் நாவற்குழி சந்திக்கும் நாவற்குழி பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காரில் பயணித்தவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வைகோ வாகனத்தை ஏற்றிச் சென்ற பார ஊர்தியை கார் முந்திச் செல்வதற்கு முற்பட்டபோதே விபத்து நிகழ்ந்தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button