இலங்கைசெய்திகள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகனம் பாதையைவிட்டு விலகி விபத்து!!

accident

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியூடாக மீனை ஏற்றிக்கொண்டு பயணித்த சிறிய ரக கெப் வாகனம் ஒன்று கடந்த வியாழக்கிழமை (30) மாலை தோப்பூர் அருகே வைத்து தலைகீழாகப் புரண்டு விபத்துக்குள்ளானது.

தோப்பூர் தயிர்வாடிப் வளைவுப் பகுதியில் வைத்து குறித்த கெப் வாகனம் பாதையை விட்டு விலகி தலைகீழாக பிரண்டுள்ளது. எனினும் வாகனச்சாரதியும் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி மீனை ஏற்றிக் கொண்டுவந்த கெப் வண்டியே மேற்படி விபத்தில் சிக்கியுள்ளது. மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.ஜே.எம்.சாலி
திருகோணமலை

Related Articles

Leave a Reply

Back to top button