இலங்கைசெய்திகள்

மதவாச்சியில் விபத்து -8 பேர் காயம்!!

Accident

இன்று (10) காலை யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் மதவாச்சி – கிரிகொல்லேவ பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 8 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வயலுக்குள் கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது பேருந்தில் 46 பயணிகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்த பயணிகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button