இலங்கைசெய்திகள்

கல்கிசை – காங்கேசன்துறை புதிய குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை!!

ac train

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கல்கிசைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நகர்சேர் கடுகதி சேவையில், புதிய குளிரூட்டப்பட்ட தொடருந்து ஒன்று இன்று(09) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

8 பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடுத்தப்படும் இந்த தொடருந்தில், 360 பயணிகள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி முதலாவது பயணத்தைக் குறித்த தொடருந்து ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button