இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

புலமைப் பரிசில் வினாத்தாள் அம்பலமாகியதா!! 

சமீபத்தில் நடந்து முடிந்த 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வட்ஸ்அப் செயலி மூலம் பரிமாறப்பட்டுள்ளதாகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து குறித்த வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

இன்று இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2.

சஜித்திற்கே ஆதரவு – அறிக்கை வெளியிட்டது தமிழரசு கட்சி!! 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

3.

தமிழரசின் தீர்மானத்தை எதிர்க்கும் சிறிதரன்!!

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தமது கட்சி வெளியிட்ட அறிக்கையை,  தாம் எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

4.

சங்குக்கு வாக்களிப்போம் – காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகள் கோரிக்கை!! 

தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்களுக்கு விடை கொடுக்க, தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்போம் என காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

5.

தயார் நிலையில் இருக்கும் இலங்கை படையினர்!!

இலங்கையில் தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமுலில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button