ஆயிரம் ஆயிரம் இதயங்களில் குடி கொண்ட அன்பாளன் அன்பழகன் – செஞ்சொற் செல்வரின் பிரார்த்தனை உரை!!
Anbalakan

இறைவன் படைத்த இனிய பிறவி. புகழின் உச்சிக்குச் சென்ற ஆசிரியர். பல்லாயிரம் மாணவர்கள் அகத்தில் வாழும் ஆத்மா. இப்படி எத்தனையோ இவரைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்.
என் செய்வது, அன்பழகனின் பிரிவு என்பது யாழ். குடாநாட்டை ஏங்கவைத்துவிட்டது. எல்லா பருவத்தினரும் அழுத காட்சி மறக்கமுடியாத ஒன்று.
பல வருடங்களாக யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைப் பெருமைப்படுத்திய சாதனையாளராக மட்டுமன்றி ஏனைய பாடசாலை மாணவர்களையும் சாதனை படைக்க வைத்த நிபுணன்.
ஆடிப்பாடி வகுப்பை நடத்தி தன் பெருமையை.நிலைநாட்டிய ஒரு வித்தகனை இனி எங்கே சந்திப்போம்? தன் வித்துவத்தால், எத்தகைய உயர் பதவி வகித்தவர்களையும் தன் கல்விச்சாலை வாசலில் காத்திருக்கச்செய்த திறனாளன், அன்பழகனிடம் பிள்ளைகளை ஒப்படைத்தால் போதும் என பெற்றவர்கள் அனைவரையும் நாடி ஓடி வரவைத்தாய்.
எல்லாம் கண்ணூறு பட்டது போல கதை முடிந்ததே. அன்பழகனே… ஆறுதல் கொள்வாய் மகனே,

உனது ஆற்றல் விண்ணுலகத்திற்கும் தேவைப்பட்டது. எம் மண்ணில் ஏதோ தவக்குறைவு. உன்னைப் பாதி வயதில் இழந்து விட்டோம்.
அன்னாரின் மனைவி, பிள்ளைகள், உறவுகளுக்கு இறையருளால் ஆறுதல் கிடைக்க பிரார்த்தித்து அன்பழகனின் ஆத்மா இறை மடியில் நிம்மதியடைய பிரார்த்தித்து அமைகிறேன்.
கலாநிதி. ஆறு.திருமுருகன்
தலைவர் – ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்.
தெல்லிப்பளை.
தலைவர்- சிவபூமி அறக்கட்டளை.
இலங்கை.
