இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கல்வியமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!

Education ministry

 கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி இரண்டு பரீட்சைகளுக்கும் தோற்றிய மாணவர்களின் நலன்கருதி அடுத்த வருடத்திலிருந்து, தொழிற்பயிற்சி, தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆறு மாதகால பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக 320 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button