![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/23-64884adc8f1ae.jpeg?resize=600%2C400&ssl=1)
தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் இளம் வைத்தியர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸாா் சந்தேகம் வௌியிட்டுள்ளனா்.
இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியர், சிலாபம் பகுதியைச் சோ்ந்த 35 வயதுடைய திருமணமாகாத வைத்தியர் எனவும் அவரது சடலம் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.
இலங்கையில் இவ்வாறு இளம் மரணங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.