![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/05/23-64773d8a536aa.jpeg?resize=600%2C400&ssl=1)
நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அயேஷ் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இன்று அதிகாலை, அவசர தேவை நிமித்தம் ஊழியர் ஒருவர் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற போதே இவரது மரணம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
அரச அதிகாரி தூக்கில் தொங்கியதை கண்டு, ஊழியர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் அரச அதிகாரியின் மரணம் கொலையா , தற்கொலையா என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.