![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/23-63f07540ccc2d.jpeg?resize=600%2C400&ssl=1)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பிரான்சில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிவசுப்பிரமணியம் சபேசன் என்ற 41 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், இவர், பிரான்ஸ் பிராந்தியத்தின் 7ம் இலக்க மெத்ரோவான வில்யுப் நகரில் வசித்து வந்தவர் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள இவரது குடும்பத்தினர், கவலையும் கலக்கமும் கொண்டுள்ளதாகவும், குறித்த நபரைக் கண்டுபிடித்துத் தருமாறு பிரான்ஸ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.