![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/12/22-639726d2747b7.jpeg?resize=600%2C400&ssl=1)
2023ம் கல்வியாண்டில் ஆரம்பப் பிரிவுக்கு தவணைப் பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து புதிய வகுப்புகள் ஆரம்பமாகவுள்ள நிலையில்
தவணைப் பரீட்சைகளுக்குப் பதிலாக ஒவ்வொரு பாடத்திற்கும் நடத்தப்படும் கணிப்பீட்டு புள்ளிகளுக்கு அமைய புள்ளி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயரதரத்தை நிறைவு செய்த மாணவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வகையில் மேற்படிப்பு வாய்ப்பினை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.