இலங்கைசெய்திகள்

யாழிலிருந்து சென்னைக்கு விமான சேவை – இன்று பதிவுகள் ஆரம்பம்!!

Airline service

எதிர்வரும் 12 ஆம் திகதி, யாழ். பலாலி – சென்னை விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்த விமான சேவைக்கான டிக்கற் வழங்கும் முற்பதிவு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி முதலாவது விமானம் 12 ஆம் திகதி, காலை 10.15 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கும். மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு இங்கிருந்து விமானம் புறப்படும்.

வாரத்துக்கு நான்கு நாட்கள் இந்தச் சேவை நடைபெறும் என வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் சுனிஸ் திஸநாயக்க நேற்றையதினம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் விமான சேவை மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பிர் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா பணியகத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button