இலங்கைசெய்திகள்

முன்னோடிப் பரீட்சையைப் பிற்போடத் தீர்மானம்!!

Exam

எதிர்வரும் ஐந்தாம் திகதி மத்திய மாகாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையை பிற்போடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அன்றைய தினம், பாடசாலைகளில் நவராத்திரி பூசை இடம்பெறவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி குறித்த பரீட்சையை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய மாகாணத்தின் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button