இலங்கைவிளையாட்டு

நீண்ட நாள் கனவை நனவாக்கியது சாவகச்சேரி பிரதேச செயலக அணி

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில், சாவகச்சேரி பிரதேச செயலக அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

நேற்றுமுன்தினம் (செய்வாய்க்கிழமை) அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில், சாவகச்சேரி பிரதேச செயலக அணியை எதிர்த்து நல்லூர் பிரதேச செயலக அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நல்லூர் பிரதேச செயலக அணி 10 பந்து பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி பிரதேச செயலக அணி 10 பந்து பரிமாற்றங்களில், 5 இலக்குகளை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்று சம்பியனாகியது.

Related Articles

Leave a Reply

Back to top button