இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு!!

water cut

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையின்படி நாளை(3) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிவரை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவளை மாநகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுலாகவுள்ளது.

அத்துடன், கொட்டிக்காவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், ரத்மலானை மற்றும் கட்டுபெத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தளை நீரேந்து நிலையத்திற்கான மின் கட்டமைப்பின், அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button