![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/22-63058fca955f2.jpg?resize=600%2C400&ssl=1)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் போராட்டத்தினையடுத்து நாட்டைவிட்டு வெளியேறிய அவர் தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். ராஜபக்ச இன்று (24ஆம் திகதி) இலங்கைக்கு வரவுள்ளதாக அவரது நெருங்கிய உறவினர்கள் முன்னதாக அறிவித்திருந்ததையடுத்து, பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலர் அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல தயாராக இருந்தனர்.
எனினும், முன்னாள் ஜனாதிபதியின் வருகை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.