இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மின்சார முச்சக்கர வண்டிகள்- இலங்கைக்கு உதவும் அமெரிக்கா!!
Electric auto

USAID நிறுவனம் ஊடாக நிலையான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் சுத்தமான எரிசக்தி திட்டத்தை நிலைநாட்ட அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் படி, இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டி பி எம் சி முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளுக்கு விற்பனைக்குப் பிந்திய சேவையாக சந்தைக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.
இதன் படி, இவ்விடயம் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம் அமெரிக்க தூதுவர் ஜூலிசங் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.