![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/IMG-ece7ad2a056ab5af1ba2ec112583b234-V.jpg?resize=708%2C472&ssl=1)
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார்.