இலங்கைசமீபத்திய செய்திகள்

இலங்கை மீட்சிபெற இந்தியா உதவும் – ஜனாதிபதி திரவுபதி முர்மு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தொடர்ந்தும் உதவி செய்வதற்கு இந்தியா உறுதியாக உள்ளதாக இந்திய குடியரசின் ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இந்திய குடியரசின் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றார். இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அழித்து அனுப்பி வைத்த பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அயல் நாடுகளுக்கு உதவியளிப்பது இந்தியாவின் கொள்கை. அந்த வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அதிலிருந்து மீட்சி பெற இந்தியா உதவும் என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button