இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் கடத்தல்!!

Kidnap

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும், ருகுணு பல்லைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அந்தணி வெரங்க புஷ்பிக என்ற இளைஞரே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் பேருந்துக்கு காத்திருந்த வேளையே அவர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button