இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்!!

SriLankan airlines

லண்டன் பயணமாகும் விமாம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்.

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் சில விமானங்களை தொடர்ந்தும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , கொழும்பில் இருந்து லண்டனுக்கான இரண்டு விமானங்களும், லண்டனிலிருந்து கொழும்புக்கான இரண்டு விமானங்களும் கடந்த மூன்று வாரங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாளாந்தம் லண்டனுக்கு ஒரு விமானம் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு பணத்தைத் திருப்பி செலுத்துவதுடன் அவர்களுக்காக வேறு விமானங்களை தயார்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button