இலங்கைசமீபத்திய செய்திகள்

இ.போ.ச யாழ்ப்பாணசாலை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணசாலை ஊழியர்கள் இன்று (24) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற இ.போக்குவரத்து சபையின் பேருந்தின் சாரதியும், நடத்துனரும் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரியே பகிஷ்கரிப்பு மேற்க்கொள்ளப்படுகின்றது.

அநுராதபுர சாலையை சேர்ந்த ஊழியர்களே இத்தாக்குதல் சம்பவத்தை மேற்க்கொண்டதாக அடையாளம் காணப்பட்ட நிலையிலும் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இதனைக்கண்டித்தே பணிபகிஸ்கரிப்பு மேற்க்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button