இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பேருந்து நெரிசலால் மயங்கிய இளைஞன் மரணம்- யாழில் நடந்த பரிதாபம்!!

Death

நேற்று மாலை  யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

பருத்தித்துறை முதலாம் கட்டை சந்தி நிறுத்தத்தில் இறங்கியதும் மயக்கி சரிந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று  அங்கு பரிசோதிக்கப்பட்ட போது இளைஞர் உயிரிழந்தமை தெரியவந்தது.

 இளைஞனின் உடலம் பிரதேப்பரிசோதனை மேற்கொள்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 பேருந்தில் அதிக பயணிகள் பயணம் மேற்கொண்டதனால் கூட்ட நெரிசல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் மக்கள் இவ்வாறான பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button