![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62b57920e3bfe.jpeg?resize=600%2C400&ssl=1)
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மண்ணெண்ணெய்க்காக மக்கள் காத்திருந்துள்ளனர்.
மண்ணெண்ணெய் பெறுவதற்காக காத்திருந்த நபரொருவர் எரிபொருள் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.