இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
எரிபொருள் நெருக்கடியில் அரச பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வு!!
Meeting
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/download-11.jpeg?resize=317%2C211&ssl=1)
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியில் அரசாங்க பணிகள், மற்றும் கல்வி நடவடிக்கைகளை இணைய வழியில் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கல்வி சார் அதிகாரிகள் , நிதி பொதுநிர்வாக அதிகாரிகள் எனப்பலரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்கால அரச மற்றும் கல்வி நடவடிக்கைகள் குறித்த இந்தக் கலந்துரையாடல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.