இலங்கை

பருத்தித்துறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் பலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சூசைப்பிள்ளை சகாயராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த வேளை குளவி கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button