![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/image_3a02b26c93.jpg?resize=550%2C310&ssl=1)
பிரபல சமூக ஊடகச் செயற்பாட்டாளரும், அமைதியான போராட்ட இயக்கத்தின் முன்னணிச் செயற்பாட்டாளருமான ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று கொம்பனித்தெரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினருக்கும், நீதித்துறைக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக’ கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த அவர்
சுமார் 2 மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.