இலங்கைசமீபத்திய செய்திகள்
யாழில் கோரம் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG_20220511_114102-1024x461.jpg?resize=708%2C319&ssl=1)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் ஆண் ஒருவரது சடலம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் இருப்பதாக சந்தேகித்த மருதங்கேணி போலீசார் நேற்று குறித்த தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்திருந்த நிலையில், இன்று (11)குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மையில் ஜெமில் தலைமையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
புதைக்கப்பட்ட சடலம் இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG_20220511_114132-1024x461.jpg?resize=708%2C319&ssl=1)