இலங்கைசெய்திகள்

குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

Department of Immigration emigration

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்தப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 5, 6 மற்றும் 9ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள் மற்றும் மே 5ஆம் திகதி சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பபடிவங்களை கையளிக்க வந்து திணைக்களத்தினால் இலக்கம் ஒன்றை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button