![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/1-1.webp?resize=360%2C240&ssl=1)
இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாட்டு மக்களுக்கு மறைத்து விட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது வீட்டில் புத்தாண்டு சம்பிரதாயங்கள் மேற்கொண்ட முறை தொடர்பில் எவ்வித நேரடி ஒளிபரப்புகளும் வெளியாகவில்லை.
அதேசமயம் இதற்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு பிரமாண்டமான முறையில் இடம்பெறுவது வழமையாகும். இம்முறை
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதால் அதிருப்தி காரணமாக இம்முறை ஒளிரப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.