இலங்கைசெய்திகள்

சித்தங்கேணியில் வீட்டில் உள்ளவர்களை கட்டிபோட்டுவிட்டு 30 லட்சத்திற்கு மேற்ப்டட பொருட்களை கொள்ளையடித்த் திருடர்கள்

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெறுமிக்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (10) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த இருவர் வீட்டுக்குள் இருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு, 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 50000 பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button