இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு 20,000 இந்திய ரூபாயை வழங்கிய தூத்துக்குடி யாசகர்

தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தான் யாசகம் பெற்ற 20,000 இந்திய ரூபாயை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசுக்கு வழங்குவதற்காக நிதியை வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார்.

இந்நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இலங்கை மக்களுக்கு உதவுமாறு தான் யாசகம் பெற்று சேமித்து வைத்த 20,000 ரூபாய் பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் பூல்பாண்டி வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button