செய்திகள்விளையாட்டு

இலங்கை வீரர்களின் பேருந்தில் வெற்று தோட்டாக்கள் – விசாரணைகள் ஆரம்பம்!!

Sri Lankan players

மொஹாலியில் இலங்கை டெஸ்ட் அணி வீரர்களை அழைத்து செல்லும் பேருந்தில் இருந்து 2 வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயிற்சி மைதானத்திற்கும், விடுதிக்கும் இடையில் இலங்கை வீரர்கள் அழைத்துச்செல்லப்பட்ட பேருந்தில் இருந்தே, குறித்த வெற்று தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த வெற்று தோட்டாக்களை இந்திய காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button