இலங்கைசெய்திகள்

நிதர்ஷனை வெள்ளை வானில் கடத்த முயற்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் உதவிச் செயலாளர் நிதர்ஷன் என்பவரைக் கல்முனையில் வைத்து வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இனந்தெரியாதவர்கள், வெள்ளை வானில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் உதவிச் செயலாளர் நிதர்ஷனைக் கடத்த முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனச் சாணக்கியன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button