![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/VADIVELU-2.jpg?resize=708%2C531&ssl=1)
கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான ‘தலைநகரம்’ படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் வெளியானதையடுத்து நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும், அவர் பேசும் நகைச்சுவை வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அத்துடன், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
இந்நிலையில் இப்படத்தில், நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
நாய் சேகர் படத்தில் நடிகர் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளதாகவும், அந்த பாடலுக்கு நடனம் அமைக்க பிரபு தேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இப்படத்தின் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பிரபு தேவா தோன்ற உள்ளதாகவும் வைரலாக பேசப்படுகிறது.
‘காதலன்’, ‘மனதை திருடிவிட்டாய்’ உள்ளிட்ட பல படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.