இலங்கைசெய்திகள்

வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி!!

gottapaya

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் ஜனாதிபதி தேர்தலில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தவறான விமர்சனங்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீள சரிசெய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள விவசாயிகளை தான் எப்போதும் மறவேன் என உறுதியளித்த ஜனாதிபதி, பயிர்ச்செய்கை முறையில் விரைவில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button