செய்திகள்விளையாட்டு
ருமேஷ் ரத்நாயக்க இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிப்பு!!
Rumesh Ratnayake

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஷ் ரத்நாயக்க எதிர்வரும் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே அணி எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை வர உள்ளது.
அதற்கமைய, ஜனவரி 16, 18 மற்றும் 21 ஆம் திகதிகளில் கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியின், இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க செயற்படவுள்ளார்.